Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி: அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த கனிமொழி

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (21:31 IST)
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவருக்கு வாக்கு சேகரித்து தேசிய தலைவர்களும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு அரவக்குறிச்சி தொகுதியில் பேசிய அண்ணாமலை, செந்தில் பாலாஜி எல்லாம் ஒரு ஆளா அவரை தூக்கி போட்டு மிதித்து விடுவேன் என்றும் என்னுடைய இன்னொரு முகம் இருக்கிறது என்றும் அது கர்நாடக முகம் என்றும் அதை காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன் என்றும் கூறினார் 
 
திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் வகையில் அண்ணாமலை பேசியதாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போடிநாயக்கனூரில் இன்று திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று சொல்கிறார். செந்தில் பாலாஜி மேல கை வச்சு பாரு தம்பி, திமுக உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments