Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷவர்மா பலி எதிரொலி; காஞ்சிபுரத்தில் ஷவர்மா கடைகளில் ரெய்டு!

Webdunia
புதன், 4 மே 2022 (15:00 IST)
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மேலும் 30 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, காமராஜர் சாலைகளில் உள்ள சில கடைகளில் சவர்மா உள்ளிட்ட துரித உணவுகள் விற்கப்படும் நிலையில் அவற்றின் தரம் மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments