Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷவர்மா பலி எதிரொலி; காஞ்சிபுரத்தில் ஷவர்மா கடைகளில் ரெய்டு!

Webdunia
புதன், 4 மே 2022 (15:00 IST)
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மேலும் 30 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, காமராஜர் சாலைகளில் உள்ள சில கடைகளில் சவர்மா உள்ளிட்ட துரித உணவுகள் விற்கப்படும் நிலையில் அவற்றின் தரம் மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments