Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 5 மணியோடு முடிகிறது அத்திவரதர் தரிசனம் – பக்தர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (15:25 IST)
நாளை (ஆகஸ்டு 15) வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் 5 மணியோடு நிறைவடையும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை மூலவர் வரதராஜ பெருமாளின் கருடசேவை நடைபெற இருப்பதால் மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இறுதி நாளான ஆகஸ்டு 16 அன்று காலை 5 மணிக்கே அத்திவரதர் தரிசனம் தொடங்கும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து முடித்த பின்பே நடை சாத்தப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments