Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொலை முயற்சி வழக்கில் ஜெயேந்திரர் உட்பட 9 பேர் விடுதலை

கொலை முயற்சி வழக்கில் ஜெயேந்திரர் உட்பட 9 பேர் விடுதலை
, வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (15:21 IST)
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர் உட்பட 9 பேர் மீதான கொலை முயற்சி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
சென்னை மந்தைவெளியை சேர்ந்த தொழிலதிபர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை, கொலை செய்ய முயன்றதாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன் உட்பட 12 பேர் பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது. இதில் ரவிசுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார்.
 
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, அப்பு, கதிரவன் ஆகியோர் இறந்து விட்டனர்.
 
மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த மாதம் ஜெயேந்திரர் உள்ளிட்டோரிடம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
 
இந்நிலையில், ஜெயேந்திரர் உட்பட 9 பேர் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து, இன்று இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவிற்கு செல்வாக்கு குறைந்ததால் நடிகர்கள் பிரசாரம் செய்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்