Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (06:43 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பகலில் ஒரு சில மணி நேரங்களும் இரவு முழுவதும் விடாமலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளனர்
 
இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, வடபழனி, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
 
சென்னை மட்டுமின்றி சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர் 
 
இதேபோல் சென்னை உள்பட மற்ற பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments