Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்திக்கு அடுத்து தேசத்தந்தைன்னா அது கலாம்தான்! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (09:42 IST)
இந்திய முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் குடியரசு தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானிகளில் முக்கியமானவருமாக கருதப்படும் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அவர் நினைவை போற்றி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அப்துல்கலாம் பிறந்தநாளில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments