Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிடர் உதவிக்கு இறங்கிய மக்கள் நீதி மய்ய படை! – கமல்ஹாசன் ட்வீட்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (12:07 IST)
தமிழகத்தில் இன்று மதியம் நிவர் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் பேரிடர் உதவி பணிகளுக்காக மக்கள் நீதி மய்யத்தினர் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் போது அதிதீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் புயலால் ஏற்படும் சேதங்களை சரி செய்யவும், மக்களுக்கு உதவவும் மீட்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் தயாராக உள்ளனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்கள் பலர் மீட்பு பணிகளில் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர் “உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை ரத்தத்தில் உண்டே உதவுமனம் - எத்தனையோ பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும் வித்தன்றோ எந்தன் படை! பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டா மாறுதல்களுக்கு இனி காத்திருக்க தேவையில்லை.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதும் காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. கேள்விக்குறியாகும் இந்தியா கூட்டணி..!

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

முல்லைப் பெரியாறு என்பது நதியல்ல; தமிழ்நாட்டின் ரத்த ஓட்டம்: வைரமுத்துவின் ஆவேச பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments