Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அள்ளி தெளிக்கும் கோலம்.. அவசரக்கோலம்! – மினிகிளினிக் சம்பவம்; கமல் நையாண்டி ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (15:27 IST)
கரூர் அம்மா மினி க்ளினிக் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் சில நாட்கள் முன்னதாக பல பகுதிகளில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. மேலும் பல இடங்களில் மினி கிளினிக்குகள் கட்டி தொடங்கி வைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கரூரில் கட்டப்பட்ட மினி கிளினிக் திறப்பு விழாவின்போதே இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் “கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர். மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments