Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – கமல் ஆவேச ட்வீட்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:15 IST)
சென்னை சௌகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தடயங்களை சேகரித்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்.” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வயது சிறுமியிடம் 50 லட்ச ரூபாய் மோசடி.. மார்பிங் செய்து மிரட்டிய நண்பனின் சகோதரர்..

எந்த போராக இருந்தாலும் அமெரிக்காவுடன் மோத தயார்: சீனா அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப் மாநிலத்தில் தியானம் செய்ய வந்த கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..!

கோவில் நிகழ்ச்சிகளில் சினிமா பாட்டுக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments