தமிழன் தலையில் கோமாளி குல்லா..போதுமா இன்னும் வேண்டுமா? - கமல்ஹாசன் அதிரடி

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:00 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைய இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
கடந்த 6 மாதங்களாக பிரிந்திருந்த முதல்வர் எடப்படி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும் இன்று இணைய உள்ளன. ஓ.பி.எஸ்-ற்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சர் பதவியும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது  கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா” எனக்குறிப்பிட்டுள்ளார்.
 
சமீப காலமாக அரசுக்கு எதிராக அவர் பல கருத்துகளை தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைய உள்ளதத்தான அவர் இப்படி குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி மீது 420 பிரிவில் வழக்குப்பதிவு..!

யாருடைய உதவியும் இல்லாமல் ரோபோ டீச்சரை உருவாக்கிய அரசு பள்ளி மாணவர்.. ஆச்சரிய தகவல்..!

உதய நிதிக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜய்தானா? இவரு என்ன புது மேட்டர வலைப்பேச்சு பிஸ்மி கிளப்புறாரு

டிட்வா புயல் எதிரொலி.. சென்னை எழிலகத்தில் பேரிடர் கட்டுப்பாட்டு மையம்..!

ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கு தயாராக இருக்கிறோம்.. எல்லை பாதுகாப்பு படை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments