Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கூறினால்தான் சிக்னல் - காங்கிரஸ் கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேட்டி

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (16:27 IST)
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் தலைமையை ஏற்பது போல் சில ஊடகங்களில் போட்டியளித்தார். அதை நிரூபிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். எனவே, காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க அவர் திட்டமிடிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து கமல்ஹாசன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆனால், நாங்கள் திமுகவுடன்தான் இப்போதும் கூட்டணியில் இருக்கிறோம் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 
 
இதுபற்றி கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது “நான் கூறினால்தான் அது சிக்னல். நான் கூறியதாக மற்றொருவர் கூறியது வெறும் செய்திதான். ராகுல் காந்தியை சந்தித்து கூட்டணி பற்றி நான் எதுவும் பேசவில்லை. நாங்கள் வேறு விஷயங்கள் பேசினோம்” என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments