Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலலிருந்து விடுதலை பெறாத வரை நாம் அடிமைகளே - கமல்ஹாசன் பொளீர்

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:49 IST)
ஊழலில் இருந்து விடுதலை பெற நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.


 

 
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். முக்கியமாக ஊழல் பற்றி அவர் அதிகமாக பேசி வருகிறார். சமீபத்தில் கூட நீட் தேர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார். 
 
இந்நிலையில், ஒரு மாநிலத்தில் போதுமான ஊழல் மற்றும் துயர சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு பொறுப்பேற்று ஒரு முதல்வர் அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என ஏன் எந்த கட்சியும் வலியுறுத்தவில்லை? என அவர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த டிவிட்டில் “என் எண்ணம் என்பது நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதுதான். அதிமுகவோ அல்லது திமுகவோ.. யார் என்னுடைய குரலை மேம்படுத்த யாருக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. தற்போதுள்ள  கட்சிகள் சரியில்லை எனில், வேறு ஒன்றை தேட வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
மற்றொரு டிவிட்டில் “சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவரின் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments