Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுடன் ஒத்துழைப்போம்: விவேக்கிற்கு வாழ்த்து கூறி டுவிட் பதிவு செய்த கமல்

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (19:00 IST)
நடிகர் விவேக் இன்று காலை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் நடிகர் விவேக் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்து ட்வீட் பதிவு செய்துள்ள கமல்ஹாசன் கொரோனா தடுப்பு ஊசி போட்டதால் தான் மாரடைப்பு ஏற்பட்டது என்று கிளம்பும் வதந்தியை பரப்பாமல் அரசுடன் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது: 
 
கொரோனா தடுப்பூசி மீதான பொது மக்களின் அச்சம் தீர வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர் நண்பர் விவேக். அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.
 
அவரது உடல் நலக் குறைவுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் நாம் தேவையற்ற அச்சம் கொள்வதை, வதந்திகளைப் பரப்புவதை நிறுத்தி விட்டு அரசுடன் ஒத்துழைப்போம்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments