Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் உடன்படும் கமல்: ஏன் இந்த திடீர் ஒற்றுமை?

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (20:07 IST)
தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
கமல்ஹாசன் சமீப காலமாக கள அரசியலில் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நீட், காஷ்மீர் பிரச்சனை, ஹிந்தி திணிப்பு, ஆகியவற்றை குறித்து ஆளும் அரசை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது கமலின் அரசியல் நுழைவு குறித்து செய்தியாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, கமல்ஹாசனுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? தொண்டர்களாவது தனடு படத்தை பார்க்கட்டும் என்று தான் நடித்துக்கொண்டிருக்கிறார் என பதிலளித்தார். 
இது குறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட போது, முதல்வர் பழனிசாமி என்னை பற்றி பேசியது அவரது கருத்து. தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்பது உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 
 
வெற்றிடம் உள்ளது எனும் ரஜினியின் கருத்தை கமல் ஏற்றுக்கொண்டிருப்பதால், நீங்கள் துணிந்து களத்தில் இறங்குங்கள், உங்கள் பின்னால் நான் இருக்கிறேன், இணைந்து பணி செய்வோம் என்று இருவரும் டீம் போட்டு மறைமுகமாக அரசியல் பணிகளை செய்வதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments