Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா இருக்கும் போது நான் ஏன் குறிவைக்கப்பட்டேன்?: மனம் திறக்கும் கமல்ஹாசன்!

ஜெயலலிதா இருக்கும் போது நான் ஏன் குறிவைக்கப்பட்டேன்?: மனம் திறக்கும் கமல்ஹாசன்!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (17:01 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசியலில் அதிகமாக பேசப்படுகிறார், அதிகமாக பேசவும் செய்கிறார். தமிழக அரசு குறித்த அவரது விமர்சனங்களும் எதிர்வினைகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
கமல்ஹாசனின் இந்த எழுச்சியை அடுத்து அவர் அரசியலுக்கு வர இருக்கிறாரோ என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
 
கேள்வி கேட்டு திணறடிக்கும் அந்த செய்தியாசிரியர் கமல்ஹாசனை பேட்டி கண்டுள்ளார். அப்போது நடிகர் கமல்ஹாசன் ஒருசில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கமலின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இந்த சிக்கலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணமாக கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் அதிமுக தான் இருந்ததாக அப்போதே கூறப்பட்டது. இந்நிலையில் முதன் முறையாக நடிகர் கமல் தான் ஜெயலலிதா இருந்த போதே குறிவைக்கப்பட்டதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
 
இது குறித்து பேசிய அவர், எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன். ஆனால் அது ஏன் என்பது தான் இதுவரை தெரியவில்லை என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments