எதையெதையோ திறந்து கல்லா கட்டுபவர்களே, இதையும் திறங்கள்: கமல்ஹாசன் டுவீட்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (21:27 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது 5வது கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சென்று உள்ளார் என்பது தெரிந்ததே
 
கோவை பகுதியில் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு பொதுமக்கள் அளித்து வருகிறார்கள் என்பதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கானோர் கூடி அவரது அவருக்கும் அவரது கட்சியினரும் ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மார்க்கெட் 9 மாதங்களாக திறக்கவில்லை என்றும் இதனால் 900 குடும்பங்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்று எதைஎதையோ திறந்து கல்லா கட்டும் அவர்கள் இதை திறக்கவும் வழி செய்யலாமே என்று தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
 
அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: கோபிச்செட்டிப்பாளையம் மார்க்கெட் 9 மாதங்களாகத் திறக்கவில்லை. 900 குடும்பங்கள் பட்டினி கிடக்கிறார்கள். எதையெதையோ திறந்து கல்லா கட்டுபவர்களே, அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் உங்களைத் தேய்ப்பது திண்ணம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்கள் விவகாரம்: ஆஜராகாத தலைமை செயலாளர்களுக்கு கண்டிப்பு.. நவம்பர் 7ஆம் தேதி புதிய உத்தரவு..!

திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று கோவை வன்கொடுமை சம்பவம் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

பீகார்ல பேசுனதை தைரியம் இருந்தா தமிழ்நாட்டுல பேசுங்க பாப்போம்! - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த 3 மர்ம நபர்கள்.. நள்ளிரவில் கோவையில் நடந்த கொடூரம்..!

தெரு நாய்கள் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக தலைமை செயலாளர் ஆஜர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments