Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா மடியில் 3வயதில் உட்கார்ந்தவன் நான்: கமல்ஹாசனின் நெகிழ்ச்சி பதிவு..!

Siva
ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (11:04 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது அக்காவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் கமல்ஹாசன் மூன்று வயதில் அண்ணா மடியில் உட்கார்ந்து இருந்ததாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையை உலகநாயகன் கமல்ஹாசன் இது குறித்த பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாக கேட்டதும் இல்லை என்கிற குறை. அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.

இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம்  நினைவுக்கு வந்தது. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.

இந்த வீடியோவில் கமல்ஹாசன் சகோதரி கூறியதாவது: நீ மூன்று வயது இருக்கும்போது திடீரென காணாமல் போய்விட்டாய். அப்போது அருகில் நடந்து கொண்டிருந்த திமுக கூட்டத்திற்கு நீ சென்றதாகவும் அங்கு அண்ணா மடியில் போய் உட்கார்ந்து கொண்டதாகவும் நமது அப்பாவின் உதவியாளர் உன்னை அழைத்துக் கொண்டு வந்தார்.

அண்ணாவின் மடியில் உட்கார்ந்ததாலோ என்னவோ நீ எப்போதும் அண்ணா போலவே பேசிக் கொண்டிருக்கிறாய் என அம்மா கூட அடிக்கடி சொல்வார்கள் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை செய்து அந்தரங்க உறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி! பெண் பரபரப்பு புகார்!

திராவிட சகோதர சகோதரிகளுக்கு ஓணம் வாழ்த்துக்கள்: முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் ட்விட்..!

இன்று அரசு தேர்வு: இணைய சேவையை கட் செய்த மாநில அரசு..!

விண்ணைத் தொட்ட பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி 2500 ரூபாயா? - மக்கள் அதிர்ச்சி!

இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுவதும் ரத்து! - பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments