Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு நான்கு நாட்கள் கழித்து நன்றி கூறிய கமல்ஹாசன்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (21:40 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி தான் திரையுலகில் நுழைந்த அறுபதாவது ஆண்டு விழாவிவையும் அவர் சிறப்பாக கொண்டாடினார் 
 
இந்த நிலையில் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி, அதாவது கமல்ஹாசனின் பிறந்த நாளன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் சேவை நாட்டுக்கு தேவை என்றும் கமல்ஹாசன் ஒரு சிறப்பான நடிகர் என்றும் அவர் அந்த டுவீட்டில் குறிப்பிட்டிருந்தார் 
 
இதனை அடுத்து நவம்பர் 7ஆம் தேதி வாழ்த்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு இன்று, அதாவது நான்கு நாட்கள் கழித்து தனது நன்றியை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நீங்கள் தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி என்றும் உங்களது வாழ்த்து என்னை மேலும் பல வருடங்கள் உறுதியுடனும் ஆக்கபூர்வமான செயல்களை செய்வதற்கும் தூண்டுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஒரு மாநிலத்தின் முதல்வர் தெரிவித்த பிறந்த நாள் வாழ்த்துக்கு நான்கு நாட்கள் கழித்து கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

பார்ன் படங்களை பார்ப்பதற்கு இனி பாஸ்போர்ட்! ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு!

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments