Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் முதல்வரானால் போடும் முதல் கையெழுத்து இதுதான்: கமல்ஹாசன்

Webdunia
செவ்வாய், 27 மார்ச் 2018 (18:01 IST)
திரையுலகில் இருந்து முதல்வர் கனவுடன் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்களிடையான உரையாடலில் தான் முதல்வரானதும் போடும் முதல் கையெழுத்து குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பொன்னேரி அருகில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மாணவர்களிடையே உரையாடிய கமல், மாணவர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், 'நீங்கள் முதல்வரானது போடும் முதல் கையெழுத்து எது? என்று கேட்டபோது, 'லோக் ஆயுக்தா' என்று பதிலளித்தார். இதே வாக்குறுதியை கடந்த சில வருடங்களுக்கு முன் பாமகவின் அன்புமணி அளித்திருந்தார் என்பதும் ஆனால் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

லோக் ஆயுக்தா என்பது ஊழலுக்கு எதிராக விசாரணை செய்யும் ஒரு மாநில நீதியமைப்பாகும். இந்த அமைப்புக்கு ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே சம்மன் அனுப்பி விசாரிக்கும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக அரசுகள் லோக் ஆயுக்தாவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments