Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மழை: கட்சி தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:08 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதையடுத்து பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே களத்தில் இறங்கி மீட்பு பணிகளை துரிதமாக செய்துவர உத்தரவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாளில் செய்தி ஒன்றை மக்களுக்கு வெளியிட்டுள்ளார். அதில் மக்கள் நீதி மய்யம் உறவுகளே! மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள். அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்
 
இதனை அடுத்து வெள்ள மீட்பு பணிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களும் களத்தில் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments