Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஸ்ட்ரோவுக்கு கமல்ஹாசன் புகழாரம் - ’அவரைப் போல் அநேக வீரர்கள்’

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:52 IST)
மக்களின் போர்வீரனாகவும், அரசியல் தலைவராகவும் வாழ்ந்து மறைந்த பிடல் காஸ்ட்ரோவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து கூறியுள்ள கமல்ஹாசன், "21-ம் நூற்றாண்டில் மேற்கத்திய உலகத்தை முதலாளித்துவத்திலிருந்து மக்கள் ஜனநாயகத்திற்கு மாற்றுவதற்கான ஆதார மையமாக விளங்கினார் காஸ்ட்ரோ. தமக்கு எதிராக சிஐஏ நடத்திய அறுநூறுக்கு மேலான கொலை முயற்சிகளிலிருந்து அவர் உயிர் தப்பினார்.

பொலிவியாவில் சே குவேராவைக் கொன்றதுபோல் கியூபாவிலும் அப்படியொரு சம்பவத்தை நிகழ்த்த சிஐஏ திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த முயற்சியில் தோல்வியுற்றதால் சிஐஏ அதைக் கைவிடவேண்டி வந்தது. இறுதியாக, ஃபிடல் காஸ்ட்ரோ தனது ஜீவனை இயற்கையிடமே ஒப்படைத்துவிட்டார். அவரைப் போல் அநேக போர்வீரர்கள் உருவாகி வருவார்கள்.

அவர்கள் உலகின் பல நாடுகளிலும் உத்வேகத்துடன் அணிவகுத்து வருகிறார்கள். உலக முதலாளித்துவம் அதிக அநீதிகள் நிறைந்ததாக ஆகும்போது இத்தகைய போராளிகள் அதிகமாக உருவாகி வருவார்கள்" என்றார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments