Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீர்வுகள் தர தெரியாதவர்களுக்கு அதிகாரம் எதற்கு: கமல்ஹாசன் காட்டம்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:52 IST)
தீர்வுகள் தர தெரியாதவர்களுக்கு அதிகாரம் எதற்கு என கமல்ஹாசன் காட்டமாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி மீது அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
தீர்வுகளை தர தெரியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசிகள் இல்லை, ஆபத்து என்று அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்
 
தீர்வுகளை தர முடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்கு உரியது என பிரதமர் மோடி மீது கமல்ஹாசன் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments