Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15க்கும் அதிகமானவர்களை ஏமாற்றி திருமணம் செய்த ‛கல்யாண ராணி’ சத்யா கைது

Siva
திங்கள், 15 ஜூலை 2024 (07:09 IST)
15 க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சத்யா என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சத்யா என்ற பெண் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பின்னர் அவர்களிடம் இருந்த பொருட்களை திருடி சென்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுவரை 15 க்கும் அதிகமானவர்களை அவர் ஏமாற்றி உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்ததாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சத்யாவின் செல்போன் சிக்னலை போலீஸ் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் அவர் புதுச்சேரியில் பதுங்கி இருந்ததாக தெரியவந்தது. உடனடியாக புதுச்சேரியில் அவர் பதுங்கி இருந்த இடத்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக அவரை கைது செய்தனர்.

இதனை அடுத்து அவரிடம் தற்போது விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தாராபுரம் இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் சத்யா தற்போது சிக்கி உள்ளதாகவும் அவர் எத்தனை ஆண்களை ஏமாற்றினார்? எவ்வளவு பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்? என்பது இனி வரும் விசாரணையில் தான் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments