Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.. பக்தர்கள் கரகோஷம்..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (07:35 IST)
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என்று அதிகாலை நடந்த நிலையில் பக்தர்கள் கோவிந்தா என்ற கரகோஷத்துடன் அவரை வரவேற்றனர். 
 
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண மற்றும் திருத்தேர் சமீபத்தில் முடிந்த நிலையில் இன்று அதிகாலை 5 30 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். 
 
அவர் பச்சை பட்டு உடுத்தி தங்க வாகனத்தில் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் இறங்கிய போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்தை பக்தர்கள் எழுப்பினார். 
 
மதுரை மாநகரிலிருந்து மட்டுமின்றி அண்டை மாநகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றல் குவிந்து இருந்ததால் 5000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்