Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்குவிப்பு; திமுக எம்.பி சொத்துக்கள் முடக்கம்! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:13 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வரம்பு மீறி சொத்து சேர்த்ததாக கள்ளக்குறிச்சி எம்.பியின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்.பியாக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த கவுதம சிகாமணி. இவர் அந்நிய செலவாணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாடுகளில் கோடிக் கணக்கில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அமலாக்கத்துறை எம்.பி சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து எம்.பி கவுதம சிகாமணியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments