Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்: மேலும் ஒருவர் பலி.. உயிரிழப்பு 66 ஆக அதிகரிப்பு

Mahendran
புதன், 10 ஜூலை 2024 (14:27 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் ஏற்கனவே 65 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியாகிவிட்டதை அடுத்து உயிரிழப்பு 66 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணா புரம் பகுதியைச் சேர்ந்த 229 பேர் கடந்த ஜூன் 18ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 65 பேர் வரை சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

 மேலும் பலர் தொடர் சிகிச்சையிலிருந்து வந்த நிலையில் இன்று சிவராமன் என்பவர் சிகிச்சையின் பலன் இன்றி உயிரிழந்தார். இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 என்று உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை பெற்று வரும் சிலர் குணமாகி வருவதை அடுத்து இனிமேல் உயிரிழப்பு ஏற்படாது என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments