Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்பீடாக வரும் கஜா!!!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (12:15 IST)
கஜா புயலின் வேகமானது 18 கிமீட்டர் வேகத்திலிருந்து 25 ஆக அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல்  திசைமாறிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையைக்கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இன்று இரவு 11.30 மணிக்கு கஜா புயல் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே கரையை கடக்க இருக்கிறது. புயலானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 6 மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
அசம்பாவிதங்களை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் தமிழக அரசால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் கஜா புயலின் வேகமானது 25 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வேகமானது மேலும் அதிகரிக்கூடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments