Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரம்! - அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (14:49 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணியாளரை மிரட்டிய விவகாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட உள்ளார். தேர்தல் நடத்தை கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்ற வாகனத்தை தேர்தல் பணியாளர் மாரியப்பன் என்பவர் சோதனை செய்துள்ளார்.

இதற்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்ததுடன் மாரியப்பனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தேர்தல் பணியில் உள்ள மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது இரண்டு பதிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி சுற்றுலா: இன்று முதல் 5 இடங்களில் இ-பாஸ் சோதனை! - சுற்றுலா பயணிகள் நிம்மதி!

கேள்வி தவறு என்பதால் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்.. தேர்வுத்துறை அறிவிப்பு..!

இன்றும் நாளையும் துக்கம் அனுசரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments