Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு போட்டு கொலை முயற்சி; கடம்பூரார் புகார்! – அமமுகவினர் மீது வழக்கு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:59 IST)
அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு கொளுத்திய விவகாரத்தில் அமமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடும் நிலையில், அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவதால் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ காரில் சென்றபோது கார் அருகே அமமுகவினர் பட்டாசு கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரளித்துள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுகவினர் திட்டமிட்டு தன் காரை வழிமறித்து பட்டாசை கொளுத்தி போட்டதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அமமுகவினர் மீது புகாரளித்துள்ளார்.

அமைச்சரின் புகாரின் அடிப்படையில் அமமுகவினர் இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments