Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் சுப்பையா சண்முகம… மறுபரிசீலனை செய்வது நல்லது – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (16:55 IST)
எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சுப்பையா சண்முகம் நியமிக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களை மத்திய அரசு இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் கீழ்பாக்கம் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவர் சுப்பையா சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுப்பையா சண்முகம் மீது கார் பார்க்கிங் செய்யும் விவகாரத்தில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் நடந்த சண்டையில் பெண்ணின் வீட்டு முகப்பில் சிறுநீர் கழித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதற்காக அப்போதே பலர் சுப்பையாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு திருமாவளவன், திருமுருகன் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் செய்துள்ளனர். இந்நிலையில் இதுபற்றி அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பியபோது ‘புகாரில் உண்மை இருந்தால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது நல்லது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments