Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்துக்கு முன் மணமக்கள் மருத்துவப் பரிசோதனை: கி.வீரமணி வரவேற்பு

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (12:05 IST)
திருமணத்துக்கு முன் மணமக்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், வழக்கு ஒன்றில் திருமணத்துக்கு முன்பு மணமக்கள் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இது மிகவும் வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.
 
மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இதை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய முன்வர வேண்டும்.
 
இந்தச் சட்டத் திருத்தம் கோரி, சமூக நல ஆர்வலர்களும் சமூக சீர்திருத்த அமைப்புகளும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments