Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வைகோ அரசியல் நாகரீகமற்றவர்..”தமிழக காங்கிரஸ் தலைவர் பாய்ச்சல்

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (15:00 IST)
மதிமுக பொது செயலாளர் வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்ற நபர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது குறித்து, மாநிலங்களவையில் பல எதிர்ப்புகள் கிளம்பியதன் இடையில், மதிமுக பொது செயலாளர் வைகோ காங்கிரஸின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். இதனை கண்டிக்கும் வகையில், வைகோ ஒரு அரசியல் நாகரீகமற்றவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

மேலும், வைகோவை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு, அவர் ஒரு அரசியல் பச்சோந்தி என்பது தெரியும் என்று மிகவும் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ இவ்வாறு பாஜகவிற்கு துணை போகலாமா என்றும் கே.எஸ்.அழகிரி வைகோ மீது குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments