Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைக்காட்சி விவாதத்தில் ஒருமையில் பேசிய பாஜக பிரமுகர் – வெளியேறிய ஜோதிமணி எம்.பி!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (07:14 IST)
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக பிரமுகர் கரு நாகராஜன், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை ஒருமையில் பேசியதை அடுத்து அவர் விவாதத்தைப் புறக்கணித்து வெளியேறினார்.

நியுஸ் 7 தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக எம்பி கலாநிதி உள்ளிட்டோருடன் பாஜகவின் கரு நாகரான் கலந்துகொண்டார். விவாதத்தில் ஜோதிமணி கொரோனா காலத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனப் பேசிக்கொண்டு இருந்தபோது பாஜகவின் கரு நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி இழிவுபடுத்தினார்.

இதனையடுத்து ஜோதிமணி அந்த விவாதத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு ஆதரவாக கலாநிதியும் வெளியேறினார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ஜோதிமணிக்கு ஆதரவாக கருநாகராஜனுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் இனிமேல் கரு நாகராஜன் கலந்துகொள்ளும் விவாதங்களில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை எனப் பலரும் அறிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments