Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன் 11-ஆம் தேதி தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல்: ராஜேஷ் லக்கானி தகவல்

Webdunia
வியாழன், 19 மே 2016 (08:26 IST)
தமிழகத்தில் தற்போது தேர்தல் ஜொரம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஜூன் 11-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.


 
 
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரவிபெர்ணாட்டு, திமுக உறுப்பினர்களான, கே.பி.ராமலிங்கம், தங்கவேலு, காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் நாச்சியப்பன் என ஆறு உறுப்பினர்களின் பதவி காலம் ஜூன் 29-இல் முடிவடைகிறது.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேவைப்பட்டால் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்று அன்றைய தினமே வாக்கு எண்ணும் பணியும் நடைபெறும் என தெரிவித்தார்.
 
மே 24 முதல் 31 வரை மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், மனு மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் எனவும், மனுக்களை திரும்ப பெறும் கடைசி தேதி ஜூன் 3-ஆம் தேதி எனவும் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments