Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கீழ்நிலை ஊழியரை பலிகடா ஆக்கவேண்டாம்: சுபஸ்ரீ வழக்கில் நீதிமன்றம் அறிவுரை

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:46 IST)
சுபஸ்ரீ வழக்கில் கீழ்நிலை ஊழியரை பலிகடா ஆக்கிவிட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டாம் என நீதிமன்றம் சாட்டையை கையில் எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று கனடா செல்வதற்காக தேர்வு ஒன்றை எழுதிவிட்டு வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுகவின் பேனர் ஒன்று விழுந்தததால் பரிதாபமாக தண்ணீர் லாரி ஏறி பலியானார். இதுகுறித்த வழக்கு இன்று நீதிமன்றம் நடைபெற்றபோது நீதிபதிகள் சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தனர்.
 
முதல் உத்தரவாக சுபஸ்ரீ குடும்பத்தினர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அந்த தொகையை அலட்சியமாக பணி செய்த மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் அவசர அவசரமாக கீழ்நிலை ஊழியர் ஒருவரை பொறுப்பாக்கி அவர்மீது நடவடிக்கை எடுத்து வழக்கை முடித்துவிட வேண்டாம் என்றும், தவறிழைத்த நபரை முறையாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments