சாட்டை துரைமுருகன் விடுவிப்பு.. காவலில் வைக்க மறுத்த நீதிபதி..

Siva
வெள்ளி, 12 ஜூலை 2024 (07:12 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சாட்டை துரைமுருகன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் வைக்க நீதிபதி மறுத்து விடுவித்தது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாகவும் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடுத்த நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி அவரை காவலில் வைக்க மறுத்து விடுதலை செய்துவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாட்டை துரைமுருகன் விடுவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களின் பேசியபோது என் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவேன் என்றும் மேடையில் பாடியது என்னுடைய பாடல் அல்ல அந்த பாடல் அதிமுக பாடல் என்றும் அவர் கூறினார். மேலும் தன்னை அரசு திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தது என்றும் அவர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

ஒன்றல்ல.. இரண்டல்ல.. 550 இண்டிகோ விமானங்கள் ரத்து.. மன்னிப்பு கேட்டு அறிக்கை..!

டிட்வா புயல் கரையை கடந்த பின்னரும் மீண்டும் மழை.. சென்னை உள்பட 14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. !

பான் மசாலா பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments