Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (18:15 IST)
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரணை செய்துவரும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மாற்ற வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழவே ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து மன்னிப்புக் கேட்கபட்டதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தன்னை விமர்சித்து கடுமையான வார்த்தைகளில் பதிவு செய்து வேறு நீதிபதி மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அதிமுகவுக்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
நடந்தது நடந்ததாக இருக்கட்டும் திறந்த மனதோடு வழக்கை விசாரணை செய்யுங்கள் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இருப்பினும் அதிமுக பொதுக்குழு வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதிமுக பொதுகுழு வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற மனுவை  ஓபிஎஸ் திரும்ப பெற்ற போதிலும் நீதிபதி இந்த வழக்கில் இருந்து விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது விஜய்க்கான ஒய் பிரிவு பாதுகாப்பு.. 11 பேர் பாதுகாப்பு..!

திமுக நடத்தி வந்த நீட் தேர்வு நாடகம் முடிவுக்கு வந்துவிட்டது: வானதி சீனிவாசன்

நீதிபதி மகனுடன் மோதல்.. பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது..!

சத்துணவு முட்டையை பதுக்கிய ஊழியர்கள்! தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி உதை! திருவண்ணாமலையில் அதிர்ச்சி!

இன்று மாலை மற்றும் இரவில் 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments