Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Mahendran
வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (10:53 IST)
அமைச்சர் பொன்முடி குறித்த செம்மண் குவாரி வழக்கு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
விழுப்புரம் மாவட்டத்தில்  செம்மண் எடுத்து முறையீடு செய்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி ஆகியோர் ஆஜராகவில்லை என்றாலும் நான்கு பேர் ஆஜரானதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் கூடுதலாக சாட்சியை சேர்த்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு விசாரணைக்காக இவ்வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments