Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் குத்துப்பாட்டுக்கு நடனம்.. மாணவர்களுக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்த நீதிபதி..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (08:02 IST)
பள்ளி வகுப்பறையில் குத்து பாட்டுக்கு நடனமாடி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை தகாத முறையில் நடத்திய மாணவர்களுக்கு நீதிபதி வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளார். 
 
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் உள்ள பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் விடுதியில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியதோடு ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. 
 
இதுகுறித்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அனைத்து மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் முன் ஆஜராகி ஆயிரம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் 
 
மேலும் ஒரு வாரம் பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும்  மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கை பற்றி, காமராஜர் துவங்கிய கல்வி திட்டங்கள் பற்றி, அப்துல் கலாம் கனவு மற்றும் திட்டம் பற்றி கட்டுரைகள் எழுத வேண்டும்  என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments