Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு இந்தி தெரியாது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Mahendran
புதன், 24 ஜனவரி 2024 (09:59 IST)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் எனவே குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஆங்கிலத்தில்தான் குறிப்பிடுவேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய அரசு தற்போது ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ  ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ஏனெனில் எனக்கு இந்தி தெரியாது என்றும் அதனால் ஹிந்தியில் உள்ள புதிய பெயர்களை என்னால் சரியாக உச்சரிப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments