பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?” அமைச்சர் எல் முருகன்

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (13:29 IST)
நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்று மத்திய இணை அமைச்சார் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

தன் உயிருக்கு ஆபத்து என போலீஸிடம் தெரிவித்தபபோது ஒரு காவலர் ஸ்டேசனில் ஆளில்லை பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்களே ஸ்டேசன் வருமாறு கூறியுள்ளார். ஒரு காவலர் இப்படி பேசலாமா? அதன் உள்நோக்கம் என்ன? போலி திராவிர்ட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுக்காபு இல்லை என்றால் மக்களின் நிலை என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நேசபிரபு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நேசபிரபுக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments