சொந்த கட்சியையே விமர்சனம் செய்த ஜோதிமணி: காங்கிரஸில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (18:25 IST)
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி ஆதரித்துள்ள நிலையில் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஜோதிமணி இதனை விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியதாவது:

உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டுகால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்திற்கு முரணானது

உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இடஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடு கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்திற்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கனவே பொருளாதார அடிப்படியிலான 10% இடஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்

இவ்வாறு ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments