Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது தமிழ்நாடு. ஒருபோதும் பிஜேபியின் கனவு நினைவாகாது: ஜோதிமணி எம்பி டுவிட்

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (09:16 IST)
இது தமிழ்நாடு என்றும் ஒருபோதும் பாஜகவின் கனவு நனவானது என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்
 
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து பாஜக பொதுச் செயலாளர் கரு நாகராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது
 
இந்த தீர்ப்புக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் வரவேற்பு அளித்து உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்த தீர்ப்புக்கு தனது கருத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியதாவது: 
 
திரு. நரேந்திரமோடியின் நல்லாசியோடு தமிழக மாணவர்களின் வாழ்வை அழிப்பதற்கு பிஜேபி துடிக்கிறது. தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பாஜகவிற்கு நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறது.  இது தமிழ்நாடு. ஒருபோதும் பிஜேபியின் கனவு நினைவாகாது என பதிவு செய்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments