Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை: ஜோதிமணி எம்பி அதிருப்தி..!

Siva
வெள்ளி, 8 மார்ச் 2024 (13:04 IST)
அரசியலில் பெண்களின் உழைப்பு மற்றும் திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். 
 
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது பெண்கள் ஏராளமான தடைகள் பிரச்சனைகளை தாண்டி சமூகத்தில் தனக்கான இடத்தை உறுதி செய்கின்றனர் என்றும் ஆனால் அரசியல் கட்சிகள் பெண்களின் உழைப்பு மற்றும் திறமைக்கு உரிய முறையில் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் 
 
அரசியல் கட்சிகள் பெண்களின் பங்களிப்பை பெயர் அளவில் தான் இருக்க விரும்புகின்றனர் என்றும் எல்லா அரசியல் கட்சிகளிலும் இதே நிலைதான் என்றும் அவர் தெரிவித்தார் 
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு  கொண்டு வந்ததன் மூலம் தான் அரசியலில் பெண்கள் பங்களிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்தார் 
 
ஒட்டுமொத்தமாக பார்த்தால் அரசியலில் பெண்களுக்கான இடம் என்பது அதிருப்தி தான் என்று அவர் கூறியுள்ளார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments