Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபிக்கு எதிராக புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டலா? ஜோதிமணி எம்பி புகார்

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (16:24 IST)
சிறப்பு டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி மிரட்டப்படுவதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் சிறப்பு டிஜிபி ஆன ராஜேஷ் தாஸ் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். இதனை அடுத்து ராஜேஷ் தாஸ் காத்திருக்கும் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார் என்பதும், அவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது பாலியல் புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இடைநீக்கம் செய்யாமல் டிஜிபி யை தொடர்ந்து பாதுகாக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது.வெட்கக்கேடானது. உடனடியாக  விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

அடுத்த கட்டுரையில்