Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி பாராளுமன்ற தொகுதி: தலித் வாக்குகள் பிரிவதால் திமுகவுக்கு வாய்ப்பா?

Siva
வியாழன், 28 மார்ச் 2024 (18:46 IST)
தென்காசியில் இரண்டு முக்கிய தலைவர்களான ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி போட்டியிடுவதை அடுத்து தலித் வாக்குகள் பிரியும் என்றும் அதனால் திமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

தென்காசி தொகுதியில் அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் கூட்டணி வேட்பாளராக ஜான்பாண்டியன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்

இந்த தொகுதியில் தலித் வாக்குகள் அதிகம் இருக்கும் நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய தலைவர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் திமுக வேட்பாளர் ராணி ஜெயக்குமார் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணசாமி இதே தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இந்த முறையாவது அவர் எம்பி ஆக வேண்டும் என்று முயற்சித்து வரும் நிலையில் ஜான்பாண்டியன் அவருடைய கனவை கலைத்து விடுவார் போல் தெரிகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments