Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணி

காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணி
, திங்கள், 23 நவம்பர் 2015 (22:29 IST)
காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்ற கோவை மாவட்ட தகுதியுள்ள வழக்குறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் வழக்கறிஞருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.


 

 
இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வழக்கறிஞர் தேவைப்படுகிறார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
 
சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர்கள், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய, குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.
 
விருப்பமுள்ள வழக்குறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil