Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்முறையை தூண்டும் கனல் கண்ணன்? நடவடிக்கை இல்லை? – அதிமுக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (12:56 IST)
சமீபத்தில் பாஜக நிர்வாகி கனல் கண்ணன் பேசிய வீடியோ வைரலாகி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. பின்னர் உள்ளாட்சி தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டாலும், குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே அதிமுகவினர் ஆதரவளித்தனர்.

சமீபத்தில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் பாஜக நிர்வாகியுமான கனல் கண்ணன் பாஜக கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டணி கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments