Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பு கடித்து பலியான இரண்டு பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் : ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (19:58 IST)
சமீபத்தில் பாம்பு கடித்து இறந்துபோன இருவரின் குடும்பத்துக்கு ஜெயலலிதா நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
 
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடலூர் மாவட்டம், காரணப்பட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகள் பாலஸ்ரீ காரணப்பட்டு அங்கன்வாடி அருகே பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
 
விழுப்புரம் மாவட்டம், ஆசனூர் கிராமத்தை சேர்ந்த தாண்டவமூர்த்தி என்பவரின் மகன் குணசேகரன் வயல்வெளியில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்ததில் உயிரிழந்தார்.
 
இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பாம்பு கடித்து உயிரிழந்த பாலஸ்ரீ மற்றும் குணசேகரன் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments