தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமூக வலைதளமான டுவிட்டர் மூலம் இன்று பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை வில்லி என குறிப்பிட்டார்.
விஜயகாந்த் சார் உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்? வைகோவை தவிர என ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், வைகோவை ஹீரோ எனவும், திமுக தலைவர் கருணாநிதியை வில்லன் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வில்லி எனவும் கூறினார்.
மேலும், சாதி மதங்களை தான் பார்ப்பது கிடையாது, தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கும் குணம் தனக்கு உள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார். விமர்சனங்கள் குறித்து தாம் கவலைப்படுவது கிடையாது என்றும், இளைஞர்களின் கையில் தான் எதிர்காலம் உள்ளதாகவும் தெரிவித்தார் விஜயகாந்த்.